குஜராத்தில் இன்று 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


குஜராத்தில் இன்று 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 14 April 2021 4:36 PM GMT (Updated: 14 April 2021 4:36 PM GMT)

குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,616 ஆக அதிகரித்துள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 7,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,616 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, குஜராத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,995 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,642 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் குஜராத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,23,371 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 39,250 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story