கர்நாடகாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,067 பேருக்கு தொற்று உறுதி


கர்நாடகாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,067 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 April 2021 3:20 PM GMT (Updated: 18 April 2021 3:20 PM GMT)

கர்நாடகாவில் இன்று 19,067 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இந்த மாத முதலில் இருந்து தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 19,067 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,61,065 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,351 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,603 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,14,152 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,33,543 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story