டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 29.74 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 20,259 பேர் குணம் அடைந்த நிலையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்புடன் 74,941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து 7 லட்சத்து 66 ஆயிரத்து 398 பேர் குணம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story