மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை; அரசு முடிவு


மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை; அரசு முடிவு
x
தினத்தந்தி 19 April 2021 10:34 AM GMT (Updated: 19 April 2021 10:34 AM GMT)

மேற்கு வங்காளத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27ந்தேதி தொடங்கி இந்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.  இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.  6வது கட்ட தேர்தல் வருகிற 22ந்தேதி நடைபெற உள்ளது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்பொழுது, மேற்கு வங்காளத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை தொடங்க முடிவு செய்துள்ளோம்.  ஜூன் வரை இந்த விடுமுறை இருக்கும் என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்வது பற்றி அவர் பேசும்பொழுது, இரவு ஊரடங்கு ஒரு தீர்வாக இருக்காது.  நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

இதேபோன்று மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் 20% படுக்கைகளை அதிகரித்து உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story