கேரளாவில் மேலும் 13,644- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,644- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மேலும் 13,644- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 53 ஆயிரத்து 068- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,305-ஆகும்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 44 ஆயிரத்து 791- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 03 ஆயிரத்து 004- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரத்து 275 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story