டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,686- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில் வரும் திங்கள் கிழமை வரை 6 நாட்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,686- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 21,500- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இன்று 240- பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொரோனா தொற்றுடன் 76 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,361- ஆக உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்தமாக குழப்பம் நிலவி வருகிறது. நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தில் சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.