தேசிய செய்திகள்

குஜராத்: மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் + "||" + Mosque in Vadodara turned into 50-bed COVID facility amid shortage of hospital beds

குஜராத்: மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

குஜராத்: மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
குஜராத்தில் மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
அகமதாபாத்,

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் உள்விளையாட்டு அரங்குகள், வணிக வளாக கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இது குறித்து மசூதி பொறுப்பாளர் கூறுகையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மசூதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் இதை விட சிறப்பாக செய்வதற்கு வேறு என்ன உள்ளது’ என்றார்.

குஜராத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 972 ஆக அதிகரித்த்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் கேரளாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
2. டெல்லியை உலுக்கும் கொரோனா; மேலும் 23, 686- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,686- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
4. டெல்லி: காரில் பயணிக்கும் போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது
டெல்லியில் காரில் பயணிக்கும்போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. டெல்லியின் சுகாதார கட்டமைப்பு அதன் எல்லையை எட்டிவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
டெல்லி சுகாதாரத்துறை கட்டமைப்பு நிலைகுலைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.