சத்தீஷ்கார் மாநிலத்தில் தடுப்பூசி போட்டு கொண்டால், ஒரு கிலோ தக்காளி இலவசம்


சத்தீஷ்கார் மாநிலத்தில் தடுப்பூசி போட்டு கொண்டால், ஒரு கிலோ தக்காளி இலவசம்
x
தினத்தந்தி 20 April 2021 12:58 PM GMT (Updated: 20 April 2021 12:58 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி கொண்டு தான் இருக்கின்றனர். மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு வந்தாலும், மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள சில கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தனர். அதாவது அவர்கள் அமைத்துள்ள கொரோனா தடுப்பூசி மையத்துக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு மூக்குத்தியும், ஆண்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மும்பை தாராவி மக்களுக்கு இலவசமாக சோப்பு, ஜூஸ் வழங்கப்படுகிறது.

தற்போது சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூரில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வித்தியாசமான சலுகையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் ஒரு கிலோ தக்காளி இலவசம் என கூறப்பட்டுள்ளது.


Next Story