டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 April 2021 5:24 PM GMT (Updated: 20 April 2021 5:24 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 395- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 395- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரேநாளில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 19,430- பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 05 ஆயிரத்து 541- ஆக உள்ளது. 

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 07 ஆயிரத்து 328- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 575- ஆக உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 638- ஆக உள்ளது. 

Next Story