திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு நாளை திருமஞ்சனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு நாளை திருமஞ்சனம்
x
தினத்தந்தி 20 April 2021 7:01 PM GMT (Updated: 20 April 2021 7:01 PM GMT)

ராமநவமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

திருமலை, 

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன்கிழமை) ராமநவமி விழா நடக்கிறது. அதையொட்டி நாளை காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பங்காருவாகிலியில் ஆஸ்தானம், 22-ந்தேதி ராமர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story