பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,673 பேருக்கு கொரோனா
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,316 ஆக உயர்ந்துள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,316 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 61 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,045 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 3,198 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,64,562 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 36,709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story