18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: கேரளா உள்ளிட்ட 4 மாநிங்கள் அறிவிப்பு


18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா  தடுப்பூசி:  கேரளா உள்ளிட்ட 4 மாநிங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 April 2021 10:55 PM GMT (Updated: 22 April 2021 12:22 AM GMT)

18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கேரளா உள்ளிட்ட 4 மாநிங்கள் வித்துள்ளன.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகள்  மேற்கொண்டு வருகின்றன. 

அந்த வகையில், 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 4  மாநிலங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன. 

Next Story