18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: கேரளா உள்ளிட்ட 4 மாநிங்கள் அறிவிப்பு
18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கேரளா உள்ளிட்ட 4 மாநிங்கள் வித்துள்ளன.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 4 மாநிலங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன.
Related Tags :
Next Story