பதஞ்சலி வளாகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: யோகா குரு பாபா ராம்தேவ்


பதஞ்சலி வளாகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை:  யோகா குரு பாபா ராம்தேவ்
x
தினத்தந்தி 23 April 2021 11:58 PM GMT (Updated: 23 April 2021 11:58 PM GMT)

பதஞ்சலி வளாகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ஹரித்வார்,

பதஞ்சலி யோகபீட வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.  ஆனால், அதில் உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பதஞ்சலியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.  இங்கே வரும் நோயாளிகள் மற்றும் ஆச்சாரியகுலத்தில் பயில்வதற்காக வருகிற புதிய மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதில், பார்வையாளர்களாக வந்த 14 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.  அவர்கள் முக்கிய வளாக பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  இது தவிர்த்து, அனைத்து செய்திகளும் வதந்திகள் மற்றும் பொய்யானவை.

நான் தினமும் யோகா மற்றும் சுகாதார நிகழ்ச்சிகளை காலை 5 மணி முதல் 10 மணி வரை நடத்தி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story