இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
x
தினத்தந்தி 24 April 2021 5:02 AM GMT (Updated: 24 April 2021 5:02 AM GMT)

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல், இந்தியாவில் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் தினம் தினம் புதிய உச்சம் எட்டி வருகிறது. இன்று தொடர்ந்து 3-வது  நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. சரியாக 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264- பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 838-பேர் குணம் அடைந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை நாட்டில் 1 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 481 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 67 ஆயிரத்து 997- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 544- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 940- ஆக உள்ளது. 


Next Story