உத்தரகண்டில் பனிச்சரிவு: 384 பேர் மீட்பு, 8- பேர் சடலங்களாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
சமோலி,
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சிக்கிக் கொண்டனர்.
தகவல் கிடைந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 384- பேர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 6 பேரில் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story