திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள்


திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள்
x
தினத்தந்தி 25 April 2021 7:52 PM GMT (Updated: 25 April 2021 7:52 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள் விழா நேற்று நடைபெற்றது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்ேதாற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால் தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களுக்கு ஆஸ்தானம் நடந்தது. இரவு 7 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூேதவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வசந்தோற்சவத்தில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். வசந்தோற்சவத்தின் 2-வது நாளையொட்டி நேற்று காலை நடக்கயிருந்த தங்கத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. வசந்தோற்சவம் கொரோனா வழிகாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.

Next Story