தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல் என தகவல் + "||" + Reportedly urging the federal government to reduce the price of corona vaccines

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல் என தகவல்

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல் என தகவல்
கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்த சூழலில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியது. 

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் உயர்த்திய நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பரவலை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த தடுப்பூசிகள்தான் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இந்தியா தயாராகி வரும் நிலையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது: ராகுல் காந்தி பாய்ச்சல்
மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.38-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. ஜி.எஸ்.டி. விலக்கு அளித்தால் கொரோனா மருந்துகள் விலை உயரும் - மம்தா பானர்ஜிக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஜி.எஸ்.டி. விலக்கு அளித்தால் கொரோனா மருந்துகள் விலை உயரும் என்று மம்தா பானர்ஜிக்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
4. "ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்" - கமல்ஹாசன்
பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5. எச்சரிக்கைகளை புறக்கணித்தது, கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு மீது லான்செட் விமர்சனம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.