தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல் + "||" + Remdesivir production likely to start in Maharashtra from today - Union Minister Nitin Gadkari

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
மராட்டிய மாநிலம் வார்தாவில் இன்று முதல் ரெம்டெசிவிர் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பை,

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மராட்டிய மாநிலம் வார்தாவில் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்க ஜெனடெக் லைப்சைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பேசினாா். அப்போது அவர் வார்தாவில் ஜெனடெக் லைப்சயின்ஸ் நிறுவனம் இன்று (புதன்கிழமை) முதல் ரெம்டெசிவிர் உற்பத்தியை தொடங்கும் என்றார்.

மேலும் அவர், ‘‘வார்தாவில் மருந்து தயாரிக்க ஐதராபாத்தில் இருந்து ஒரு குழு வந்து உள்ளது. ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதன்கிழமை (இன்று) முதல் மருந்து தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தினந்தோறும் 30 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்படும். இந்த மருந்து நாக்பூர் மற்றும் விதர்பாவில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படும்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.108 கோடி ஒதுக்கீடு
கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.108 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி கூறியுள்ளார்.
2. ‘கோவின்’ இணையதளத்தில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்
கோவின் செயலியில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகப்படுத்தப்படுகிறது.
3. மராட்டிய மாநிலத்தில் இன்று 51,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,22,902 ஆக அதிகரித்துள்ளது.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் என்ன?
கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்து இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
5. மராட்டிய மாநிலத்தில் மே 10 வரை சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - மத்திய ரெயில்வே அறிவிப்பு
மராட்டிய மாநிலத்தில் பயணிகள் வரத்து குறைவால் சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.