சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி


சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து  விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
x
தினத்தந்தி 29 April 2021 8:28 AM GMT (Updated: 29 April 2021 8:28 AM GMT)

டெல்லியில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த \ 6 பேர் பலியானார்கள்.

புதுடெல்லி

டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் வால்மீகி காலனியில் இன்று மதியம் மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மின்சார கோளாறால் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவியதால், வீட்டில் உள்ள சமையல் கேஸ்  சிலிண்டர் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வண்டிகள்  விரைந்தன. சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் கமலேஷ் (37), அவரது மனைவி புதானி (32), அவர்களது இரண்டு மகள்கள், 16 மற்றும் 12, மற்றும் இரண்டு மகன்கள், 6 வயது மற்றும் 3 மாதங்கள் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீயணைப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் உடல்களை, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் வ்ழக்குப்பதிவுச் எய்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story