தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் + "||" + There is no shortage of oxygen in the state but we need empty cylinders: Himachal Pradesh CM Jairam Thakur

இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல்

இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல்
இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிம்லா,

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார் என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக் கானோர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி வருகின்றனர்.

முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் நோயாளிகளின் பெருக்கத்தால் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது:-

மாநிலத்தில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. எங்களுக்கு ஆக்சிஜன் காலி சிலிண்டர்கள் தேவை. மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பியூஷ் கோயலுடன் நான் இன்று பேசினேன், எங்களுக்கு 5000 டி-வகை & 3000 பி-வகை காலி சிலிண்டர்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் செய்யப்படும். இதற்காக 1000 தடுப்பூசி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயில்கள் மூலம் நேற்று பல்வேறு மாநிலங்களுக்கு 800 டன் ஆக்சிஜன் கொண்டு சேர்ப்பு - இந்திய ரெயில்வே தகவல்
இந்தியாவில் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் 7,115 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
2. ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர திருவள்ளூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சென்ற 2 லாரிகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
3. கத்தாரில் இருந்து மேலும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கப்பல் மூலம் இந்தியா வந்தது
இந்திய கடற்படை கப்பல் மூலமாக கத்தாரில் இருந்து மேலும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது.
4. கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது: பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை என்றும் பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
5. மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுகிறது; மாநகராட்சி குற்றச்சாட்டு
மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுவதாக மாநகராட்சி குற்றம்சாட்டி உள்ளது.