அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு


அசாமில் மீண்டும் நிலநடுக்கம்;  ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 30 April 2021 12:30 PM GMT (Updated: 30 April 2021 12:30 PM GMT)

அசாமில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. சோனித்பூர் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.49- மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவனது. 

அசாமில் கடந்த 28 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக நிலநடுக்கம்  பதிவானது.  அடுத்தடுத்து அசாமில் ஏற்படும் நிலநடுக்கம் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. 


Next Story