கேரளாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 May 2021 6:44 PM GMT (Updated: 1 May 2021 6:44 PM GMT)

கேரளாவில் நேற்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் நேற்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 636 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 6 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 15 ஆயிரத்து 493 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 77 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது.

Next Story