உத்தர பிரதேசத்தில் மே.17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
உத்தர பிரதேசத்தில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 29 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 6 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அண்டை மாநிலமான டெல்லியிலும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மே 10 ஆம் தேதி மிகப்பெரிய தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story