தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Puducherry CM Rangasamy confirmed corona impact

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா 2வது அலையால் தினமும் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 15க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர்.  அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே வேறு வழியின்றி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.  இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன.  அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார்.  அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டு கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: மராட்டியம், டெல்லி, உள்பட 10 மாநிலங்களில் 71.81 சதவீதம் பதிவு
இந்தியாவில் மராட்டியம், டெல்லி, உ.பி. உள்பட 10 மாநிலங்கள் 71.81 சதவீத கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.
2. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 4 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 லட்சம் கடந்துள்ளது.
3. உத்தர பிரதேசத்தில் சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உத்தர பிரதேசத்தில் சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
4. இந்தியாவில் தொடரும் உச்சம்: ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை உச்சமடைந்துள்ளது.
5. கொரோனா பாதிப்பு; கடந்த ஆண்டை விட மரண விகிதம் குறைவு: மும்பை மேயர் பேட்டி
கொரோனா பாதிப்புகளால் மரணமடைந்தோர் விகிதம் கடந்த ஆண்டை விட குறைவு என மும்பை மேயர் பேட்டியில் கூறியுள்ளார்.