கேரளாவில் மேலும் 43,529- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 43,529- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 May 2021 12:22 PM GMT (Updated: 12 May 2021 12:22 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,529- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,529- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  34,600 பேர் தொற்றில் இருந்து ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். 

கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,053- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 71 ஆயிரத்து 738- ஆக உள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 320- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


Next Story