கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு ஒத்திவைப்பு


கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 May 2021 4:25 AM GMT (Updated: 13 May 2021 4:25 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிவேகமாக பரவி வரும் சூழ்நிலையில் பொது நுழைவு தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்வு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும என கர்நாடக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத தகுதியான மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28-ந் தேதி உயிரியல், கணிதம், 29-ந் தேதி இயற்பியல், வேதியியல் பாடத்தேர்வுகளும், 30-ந் தேதி கன்னட தேர்வும் நடைபெறும் என்று அந்த தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story