ஆந்திரா, தெலுங்கானாவில் 9 மேலவை இடங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு


ஆந்திரா, தெலுங்கானாவில் 9 மேலவை இடங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 14 May 2021 12:33 AM GMT (Updated: 14 May 2021 12:33 AM GMT)

ஆந்திர சட்ட மேலவையில் 3 உறுப்பினர்களின் (எம்.எல்.சி.) பதவிக்காலமும், தெலுங்கானா சட்ட மேலவையில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலமும் இன்னும் 20 நாட்களில் முடிவடைகிறது.

புதுடெல்லி, 

ஆந்திர சட்ட மேலவையில் 3 உறுப்பினர்களின் (எம்.எல்.சி.) பதவிக்காலமும், தெலுங்கானா சட்ட மேலவையில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலமும் இன்னும் 20 நாட்களில் முடிவடைகிறது. தேர்தல் சட்டப்படி, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா நிலைமை சீராகும்வரை இந்த தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட 2 மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்ட பிறகு, உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Next Story