ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து
x
தினத்தந்தி 14 May 2021 1:04 AM GMT (Updated: 14 May 2021 1:04 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரம்ஜான் புனித பண்டிகை கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், தேவைப்படும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. இந்த இனிமையான தருணத்தில் அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், கொரோனாவுக்கு எதிரான அனைத்து விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றி சமூகம் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்காக செயல்படவும் அனைவரும் உறுதியேற்போம் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story