கர்நாடகாவில் மேலும் 41,779- பேருக்கு கொரோனா- 373 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் மேலும் 41,779- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவலில் மிகக்கடுமையான பாதிப்பை கர்நாடகாவும் சந்தித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் கடுமையான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும்,தொற்று பரவல் கட்டுக்குள் வர மறுக்கிறது.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,779- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 373- பேர் இன்று மட்டும் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து 35 ஆயிரத்து 879- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 30 ஆயிரத்து 267- ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 10 ஆயிரத்து 557- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 98 ஆயிரமாக உள்ளது.
Related Tags :
Next Story