மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 960- பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 960- பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 May 2021 4:05 PM GMT (Updated: 15 May 2021 4:05 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக இன்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் மராட்டிய மக்களுக்கு லேசாக நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில்  34,848- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 59,073- பேர் குணம் அடைந்துள்ளனர். ஆனால் கவலை அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 960- பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்து 44 ஆயிரத்து 063- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80,512- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 67 ஆயிரத்து 053- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 94 ஆயிரத்து 032- ஆக உள்ளது. 

Next Story