மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடக்கம்
டவ்தே புயல் காரணமாக தடுப்பூசி போடும் பணி மும்பையில் கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
மும்பை,
மாராட்டிய மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், டவ்தே புயல் காரணமாக தடுப்பூசி போடும் பணி மும்பையில் கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் தொடங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் புதிதாக 1,240 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
Related Tags :
Next Story