மத்திய பிரதேசத்தில் இன்று 9,327 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
மத்திய பிரதேசத்தில் தற்போது 62,053 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 3,844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,60,963 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,483 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 9,327 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,91,427 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தற்போது 62,053 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story