விசாகப்பட்டினம் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணையை வடிகட்டும் இடத்திலுள்ள குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அங்கு புணிபுரிந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ மளமள வென பரவி வருகிறது. அங்கு பணியில் இருந்தவர்கள் அனைவருமே தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தீயின் வேகம் கரும்புகை சூழ்ந்துள்ள காரணத்தால் தற்போது அந்த தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு கடற்படை வீரர்களும் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story