மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு


மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 May 2021 11:23 AM GMT (Updated: 27 May 2021 11:23 AM GMT)

மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மேற்குவங்காள அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, மேற்குவங்காளத்தில் ஜூன் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மேற்குவங்காள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story