பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 5,995 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 5,995 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 27 May 2021 9:27 PM GMT (Updated: 27 May 2021 9:27 PM GMT)

பஞ்சாபில் தற்போது 48,231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 3,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,56,089 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 178 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,004 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5,995 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,93,854 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பஞ்சாபில் தற்போது 48,231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story