தேசிய செய்திகள்

யாஸ் புயல் பாதிப்பு; ஒடிசா முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை + "||" + Bhubaneswar | Prime Minister Narendra Modi holds meeting with Odisha CM Naveen Patnaik to assess the impact of cyclone Yaas

யாஸ் புயல் பாதிப்பு; ஒடிசா முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

யாஸ் புயல் பாதிப்பு; ஒடிசா முதல் மந்திரியுடன்  பிரதமர் மோடி ஆலோசனை
. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புவனேஷ்வர்,

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று முன்தினம் காலையில், ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது, ஒடிசா மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று ஒடிசா சென்றார். 

புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது புயல் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் வாயிலாக  பிரதமர் ஆய்வு செய்கிறார். மேலும் மேற்குவங்க மாநிலத்திலும் யாஸ் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மே.வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
கலைகுன்டா விமானப்படை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.
2. ஒடிசாவில் ‘யாஸ்’ புயல் கரையை கடந்தது; மேற்கு வங்காளத்தில் 1 கோடி பேர் பாதிப்பு; 3 லட்சம் வீடுகள் சேதம்; 21 லட்சம் பேர் வெளியேற்றம்; மீட்புப்பணியில் ராணுவம்
ஒடிசா கடலோர பகுதியில் ‘யாஸ்’ புயல் கரையை கடந்தது. மேற்கு வங்காளத்தில் 1 கோடி பேர் புயலால் பாதிக்கப்பட்டதாகவும், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார். 2 மாநிலங்களிலும் 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
3. ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் யாஸ் புயல் காரணமாக கடல் சீற்றம்: உள்வாங்கிய கடல்நீர்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில், யாஸ் புயல் காரணமாக கடல்நீர் உள்வாங்கியதால், படகுகள் தரைதட்டி நிற்கின்றன.
4. மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி
பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் சில பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. ஒடிசாவை நெருங்குகிறது ‘யாஸ் புயல்’ - கனமழை கொட்டுகிறது
அதிதீவிரம் அடைந்த ‘யாஸ்’ புயல் இன்று ஒடிசா, மேற்கு வங்காளத்துக்கு இடையே கரையை கடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை