அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா


அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 May 2021 8:18 PM GMT (Updated: 29 May 2021 8:18 PM GMT)

அசாம் மாநிலத்தில் தற்போது 54,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 5,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,623 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,245 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 3,905 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,44,083 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 54,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story