அசாமில் இன்று 5,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


அசாமில் இன்று 5,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 30 May 2021 6:28 PM GMT (Updated: 30 May 2021 6:28 PM GMT)

அசாம் மாநிலத்தில் தற்போது 52,448 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 3,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,06,868 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 55 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5,690 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,49,773 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 52,448 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story