கேரளாவில் மேலும் 12,300 பேருக்கு கொரோனா
கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,06,982 ஆக உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,300-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “மாநிலத்தில் புதிதாக 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89,345 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 13.77 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 174- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 8,815 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 28,867- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,10,385 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,06,982 ஆக உள்ளது.
Related Tags :
Next Story