மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது


மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 31 May 2021 3:05 PM GMT (Updated: 31 May 2021 3:05 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 16.39 சதவிகிதமாக உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்தநிலையில் மே மாதம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.  

கடந்த 24 மணி நேரத்தில் 15,077- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 184 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து 33 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில்  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,53,367- ஆக சரிந்துள்ளது. 

மராட்டியத்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு இன்று குறைவாக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 16.39- சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.66-சதவிகிதமாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93 சதவிகிதமாக உள்ளது. 


Next Story