கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி கேரளாவில் தொடங்கும். தொடர்ந்து 4 மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும். இந்த நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக நாளை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வட இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story