அசாம், பஞ்சாப், மே.வங்காளம் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்


அசாம், பஞ்சாப், மே.வங்காளம் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 2 Jun 2021 4:06 PM GMT (Updated: 2 Jun 2021 4:06 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் வேகம் சற்று குறையத்தொடங்கியுள்ளது.

கவுகாத்தி,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,281- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  இன்று ஒரே நாளில் 99- பேர் உயிரிழந்த நிலையில் 4,426- பேர் குணம்  அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன்  31,133- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,923- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 135- பேர் உயிரிழந்த நிலையில் 17,386- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்புடன்  70,015- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அரியானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1171- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2705- பேர் குணம் அடைந்த நிலையில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் 14,688- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 4,178- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து 4,389- பேர் குணம் அடைந்த நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,668- ஆக உள்ளது. 

Next Story