கர்நாடகாவில் இன்று புதிதாக 18,324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 18,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.
அதன்படி, கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 18,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,53,466 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 514 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,531 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 24,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,36,069 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 2,86,798 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story