யோகி ஆதித்யநாத், ராம்தேவ் எழுதிய புத்தகங்கள் தத்துவவியல் கல்வி பாட திட்டத்தில் சேர்ப்பு
யோகி ஆதித்யநாத் மற்றும் ராம்தேவ் எழுதிய புத்தகங்கள் தத்துவவியல் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில முதல்மந்திரியாக செயல்படுபவர் யோகி ஆதித்யநாத். பாஜகவை சேர்ந்த இவர் யோகா மூலம் நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக ஹத்யோகா கா ஸ்வரப் வா சாதனா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதேபோல், யோகா குரு என கூறிக்கொள்ளும் பதஞ்சலி நிறுவன தலைவரான ராம்தேவ் யோக் சாதனா வா யோக் சிகிஸ்டா ரகஷ்யா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகமும் யோகாவின் பலன்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு புத்தகங்களும் உத்தரபிரதேச மாநில அரசால் இயங்கும் சந்த்ஹரி ஷாரான் சிங் பல்கலைகழகத்தில் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இளநிலை தத்துவவியல் (philosophy) பாடங்களில் இந்த புத்தகங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தத்துவவியல் பயிலும் மாணவர்கள் யோகி ஆதித்யநாத் மற்றும் ராம் தேவ் எழுதிய புத்தகங்களை படிக்க வேண்டும். பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களும் யோகா தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story