டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்


டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
x
தினத்தந்தி 6 Jun 2021 6:44 AM GMT (Updated: 6 Jun 2021 6:44 AM GMT)

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளிக்க மறுத்ததாகக் கூறப்படும்  நிலையில், மத்திய அரசு மீது கெஜ்ரிவால் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  

இன்று டிஜிட்டல் முறையில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில் , “டெல்லியில் வீடு வீடாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அமல் ஆவதற்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில் மத்திய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது.” என்றார். மேலும் ரேஷன் மாஃபியாக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அனுமதி அளிக்க மறுப்பதாகவும் கெஜ்ரிவால் சாடினார். 


Next Story