மே.வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து


மே.வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து
x
தினத்தந்தி 7 Jun 2021 10:21 AM GMT (Updated: 7 Jun 2021 10:27 AM GMT)

மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு, மராட்டியம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட  மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில், மேற்கு வங்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்வு நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்து இருந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


Next Story