உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் சுவேந்து அதிகாரி சந்திப்பு
உள்துறை மந்திரி அமித்ஷாவை மே.வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,
மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக தொண்டர்கள் மீது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. வன்முறையில் பல்வேறு தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது.
ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இது தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சுவேந்து அதிகாரியின் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
Related Tags :
Next Story