ஜம்மு காஷ்மீர்:புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே பயங்கர தீ விபத்து
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவதேவி கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ரேசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற இடத்தில் புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அருகில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இது தொடர்பாக புகைப்படங்கள் உள்ளூர் வாசிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
Related Tags :
Next Story