கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,567- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,567- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,567- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 20,019- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,43,254- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 04 ஆயிரத்து 011 ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 09 ஆயிரத்து 979- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 14.15 சதவிகிதமாக உள்ளது.
கேரளாவில் மாநிலம் முழுவதும் வரும் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்தால் மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story