கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு


கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 1:31 PM GMT (Updated: 8 Jun 2021 1:31 PM GMT)

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ மாநிலத்தில் புதிதாக  7,796 - பேருக்கு  நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,71,007 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 14,641 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 77 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,51,790 பேர் குணமடைந்துள்ளனர். 11,629 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,07,588 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story